நடிகர் திலகத்திற்கு தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சென்னையில் அப்பல்லோ மருத்துவ மனையில் நேற்று (சனிக்கிழமை)மரணமடைந்தார். தியாகராயராய நகர் போக் ரோட்டில் உள்ள "அன்னைஇல்ல"த்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
திரையுலகின் சார்பில் டைரக்டர்கள் பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா உட்பட அனைத்து டைரக்டர்களும்வந்துள்ளனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், மற்றும் நடிகைகள் ரேவதி, ராதிகா, போன்ற அனைத்துநடிக நடிகைகளும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி சார்பாக, சிவாஜியின் உடலில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் பட்டது.
மூப்பனார், திருநாவுக்கரசு, வைகோ, உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம்இருக்கின்றனர்.
பொதுமக்களும், உறவினர்களும் திரளாக வந்தவண்ணம் இருக்கிறார்கள். ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் அங்குகூடி தங்கள் தலைவனுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது.
சிவாஜியின் இறுதி ஊர்வலம் நாளை (திங்கள்மிழமை) முற்பகல் 11.30 மணியளவில் நடைபெறும் என்றுகூறப்படுகிறது.