யாழ்பாணத்தில் விமானப் படை குண்டுவீச்சு
Subscribe to Oneindia Tamil
யாழ்பாணம்:
கொழும்பில் விமானப் படைத் தளத்தையும், விமான நிலையத்தையும் விடுதலைப் புலிகள் தாக்கியதற்குபதிலடியாக இலங்கை விமானப் படை தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்பாணம் பகுதியில் குண்டுவீச்சுத் தாக்குதல்நடத்தியது.
இலங்கை சர்வதேச விமான நிலையத்தை புலிகள் மிகத் திட்டமிட்டுத் தாக்கியதாக ராணுவ அதிகாரிகள்தெரிவித்தனர். கொஞ்சம் கூட எதிர்பாராத வகையில் இந்தத் தாக்குதல் நடந்ததால், சுதாரித்துத் திருப்பித் தாக்கவேவெகு நேரம் பிடித்தது என்றனர்.
விமான நிலையம் தங்கள் கட்டுப்பாட்டி வந்துவிடதாகக் கூறும் இலங்கை அரசு, நாளை (புதன்கிழமை) முதலேமீண்டும் விமான நிலையத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
புலிகளின் தாக்குதலில் இலங்கை ஏர்லைன்சுக்காக பணிபுரிந்து வந்த ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவரும்,இலங்கைத் தொலைக் காட்சியான ரூபவாகியின் நிருபர் ஒருவரும் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications