தங்களைத் தாக்கிய விமானங்களைத் தாக்கிய புலிகள்
கொழும்பு:
தங்கள் மீது குண்டுகளை வீச இலங்கை ராணுவம் பயன்படுத்தி வந்த கிபிர் ரக விமானங்களைத் தான் விடுதலைப் புலிகள் முதலில் தாக்கி அழித்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானப் படைத் தளத்துக்குள் நுழைந்த புலிகளின் தற்கொலைப் படை முதலில் தாக்கியது இந்த கிபிர் விமானங்களைத் தான்.
இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் ராணுவத்தால் நேரடியாக புலிகளை எதிர் கொள்ள முடியவில்லை என்பதால் இந்தப் பகுதிகளில் விமானங்கள் மூலம் தான் தாக்குதல் நடத்தி வருகிறது அரசு.
இந்த விமானங்கள் விடுதலைப் புலிகளின் பதுங்கு அறைகள், குழிகள் மீது குண்டு வீசித் தாக்குவது வழக்கம். சில நேரங்களில் அப்பாவித் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் இந்த விமானங்கள் குண்டுவீசிவிட்டுச் செல்வதுண்டு. பல அப்பாவித் தமிழர்களும் இந்தத் தாக்குதல்களில் இறந்துள்ளனர்.
சொன்னது போலவே தங்கள் பகுதிகள் மீது தாக்கிய கிபிர் விமானங்களைத் தான் புலிகள் முதலில் தாக்கி அழித்துள்ளனர்.
இஸ்ரேலிடம் வாங்கிய விமானங்கள்:
கடந்த ஆண்டில் புலிகளின் தாக்குதல் மிக பயங்கரமான நிலையை அடைந்தபோது தான் இந்த கிபிர் ரக குண்டு வீச்சு விமானங்களை இஸ்ரேலிடமிருந்து இலங்கை வாங்கியது. இந்த விமானங்கள் வாங்குவதற்காக கூடுதல் வரிகளையும் அரசு போட்டது.
இப்போது இந்த விமானங்களில மூன்றை புலிகள் தாக்கி அழித்துள்ளனர்.
அதே போல இலங்கையின் முக்கிய வருவாயே சுற்றுலா மூலம் தான் வருகிறது. இதற்காக 12 போயிங் விமானங்களை உலகம் முழுக்க இயக்கி வருகிறது இலங்கை. இப்போது இதில் 5 போயிங் விமானங்களை புலிகள் சேதப்படுத்தியிருப்பதாலும் ஒரே சர்வதேச விமான நியைத்தைத் தாக்கியிருப்பதாலும் விமானத் துறைக்கும் சுற்றுலா வருவாய்க்கும் பெரும் அடி விழுந்துள்ளது.
தென் இலங்கை அமைதியாகவே இருந்து வந்ததால் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தனர். இப்போது கொழும்பிலேயே புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் வரவும் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனால் தான் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் விமான நிலையத்தைத் திறந்துவிட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. நாளையே விமான நிலையம் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் எனவும் அறிவித்துள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications