பூலன் தேவி சுட்டுக் கொலை: பட்டப் பகலில் கொடூரம்
டெல்லி:
முன்னாள் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியும் சமாஜ்வாடி கட்சியின் எம்.பியுமான பூலன்தேவி டெல்லியில்தனது இல்லத்தின் அருகிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
காலையில் நாடாளுமன்றத்துக்குச் சென்ற பூலன்தேவி பகல் உணவுக்காக அசோகா ரோட்டில் உள்ள தனது அரசுஇல்லத்துக்கு காரில் வந்தார். 1.45 மணியளவில் வீட்டருகே அவரது கார் வந்தபோது இடையில் ஒரு மாருதி கார்வழி மறித்தது.
அதிலிருந்து இறங்கிய கும்பல் பூலன்தேவியை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டது. இதில் பூலன்தேவியின் தலையில்3 குண்டுகள் பாய்ந்தன.
ரத்த வெள்ளத்தில் மிதந்த பூலன்தேவி உடனடியாக ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அங்கு சிறிது நேரத்தில் இறந்தார்.
இந்தத் தாக்குதலில் பூலன்தேவியின் பாதுகாவலருக்கும் பலத்த குண்டுக் காயம் ஏற்பட்டது.
எம்.பியாக உள்ள பூலன் தேவி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அவருக்கு மரியாதை தெரிவிக்கும் வண்ணம் ராஜ்யசபாவிலும், லோக் சபாவிலும் உறுப்பினர்கள்2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
உத்திரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூர் தொகுதியிலிருந்து சமாஜ்வாடி கட்சியின் சார்பில் எம்.பியாகத்தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூலன்தேவி.