புலிகள் தாக்குதல்: விமானப் படை தனி விசாரணை
கொழும்பு:
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப்புலிகளால் கொழும்பு விமான நிலையமும் விமானப் படையின்விமான தளமும் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு இலங்கை விமானப் படையும் தனியாக ஒருவிசாரணைக் கமிட்டியை அமைத்துள்ளது.
இந்த விமானத் தளத்தில் உள்ள யாரோ ஒருவருடைய உதவி எதுவும் இல்லாமல் விடுதலைப்புலிகளால் உள்ளேவருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதுகிறது விமானப்படை. இதனால் இந்த விமானத் தளத்தில் இதற்குமுன்னர் பணி புரிந்தவர்களிடம் கூட விசாரணை நடத்தப்பட உள்ளது.
விமானத் தளத்தின் அருகிலுள்ள ராஜ் பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில், முழுக்க முழுக்க ஏர் கண்டிஷன்செய்யப்பட்ட ஒரு பஸ்ஸில்தான் விடுதலைப் புலிகள் வந்து இறங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தப்பகுதியில் காவலுக்கு நின்ற 2 விமானப்படைக் காவலர்களின் மீது விமானப்படையின் விசாரணைக் கமிட்டியின்பார்வை திரும்பியுள்ளது.
இந்தத் தாக்குதலில் மொத்தம் 14 விடுதலைப்புலிகள் ஈடுபட்டனர் என்றும், அனைவருமே சம்பவத்தில்கொல்லப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications