கார்கில் நினைவு நாள்: வீடுகளில் தீபமேற்றி அஞ்சலி
டெல்லி:
கார்கில் போரின் 2-ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப் படுகிறது.பொது மக்களும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இவர்களுடைய நினைவைப் போற்றும் வகையிலேயே, ஆண்டுதோறும் கார்கில் நினைவு நாள்அனுசரிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி கார்கில் வீரர்களுக்குநினைவஞ்சலி செலுத்துகிறார்கள்.
தமிழகத்திலும் கார்கில் வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இன்று (ஜூலை26) கார்கில் போர் முடிவடைந்து 2-வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. மேஜர்ஜெனரல் ஜம்முவால் இன்று காலை 10 மணிக்கு, சென்னை போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்துகிறார்.
கார்கில் போர் வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில், பொதுமக்கள் இன்று இரவு 8 மணியளவில் தங்களதுஇல்லங்களில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications