527 "ஆபரேஷன் விஜய் வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி
டெல்லி:
"ஆபரேஷன் விஜய்" வெற்றி மூலம் கார்கில் பகுதியைப் பாகிஸ்தானிடம் இருந்து மீட்ட 527 ராணுவ வீரர்களுக்கும்வியாழக்கிழமை நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்றைய தினத்தில், கார்கில் பகுதியில் போரிட்ட வீரர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டிலுள்ள அனைத்து ராணுவவீரர்களும் நினைவு படுத்தப்படுகிறார்கள். கார்த்திகை தீபம் போலவே, அனைத்து வீடுகளிலும் விளக்கேற்றி வைத்துகார்கில் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்திய ராணுவத்தின் அனைத்துத் துறைகளும் இந்த கார்கில் வெற்றியை ஒரு பெரும் விழாவாகவே கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
அனைத்து மாநிலங்களும் கார்கில் வெற்றியைக் கொண்டாடி வருகின்றன. கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், அவர்களுடைய குடும்பங்களுக்கு உதவி செய்தும் கார்கில் தினத்திற்குமாநிலங்கள் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
வியாழக்கிழமை காலையிலேயே பிரதமர் வாஜ்பாய், துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பாதுகாப்புத் துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் டெல்லியின் இந்தியா கேட்டில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து, கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கார்கில் வெற்றி கொண்டாட்டச் செய்திகள் நாடு முழுவதிலுமிருந்து வந்து கொண்டே இருக்கின்றன.