பா.ம.க. விவகாரம்: கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சு
சென்னை:
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி தன்னை இணைத்துக் கொண்டுள்ளதுபற்றி, தமிழக தே.ஜ. கூட்டணிக் கட்சிகளுடன் திமுக பேச்சு நடத்தவுள்ளது.
தன்னுடைய 5 எம்.பிக்களுடன் டெல்லி சென்ற ராமதாஸ், பிரதமர் வாஜ்பாய் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ்ஆகியோரைச் சந்தித்து, ஒற்றைக் காலில் நின்று, மீண்டும் அக்கூட்டணியில் தன் கட்சியைச் சேர்த்துவிட்டார்.
ஆனால், தமிழகத்தில் இதே கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் ராமதாசின் வருகைக்கு எதிர்ப்புதெரிவித்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி கலகலத்து வருகிறது.
இந்நிலையில், விரைவில் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் அனைவரும் கூடி,பாமகவை மீண்டும் கூட்டணியில் சேர்த்தது பற்றி விரைவில் பேசவுள்ளனர்.
இதுகுறித்து, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில்,
பா.ம.கவை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்துக் கொண்ட வாஜ்பாயின் முடிவுக்கு நான் எதிர்ப்புஎதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், கூட்டணியில் மீண்டும் சேர்ந்த பிறகு நான் இன்னும் ராமதாஸைச் சந்திக்கவில்லை. இதுவரை அவர்என்னிடம் இதுகுறித்துப் பேசவும் இல்லை.
இவ் விவகாரம் குறித்து விரைவில் தமிழகத்திலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கூடி திமுகவிவாதிக்கவுள்ளது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications