கிரிக்கெட்: கங்குலி சஸ்பெண்ட்
மும்பை:
சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்சவ்ரவ் கங்குலி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த வார ஆரம்பத்தில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் மோதிய ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில்இந்தியா தோற்றது.
அப்போட்டியில் 60 ரன்களுக்கும் மேல் குவித்திருந்த கங்குலி, "222 ரன்கள் என்பது அடையக் கூடிய ஒருஇலக்குதான். இந்திய வீரர்கள் இதை எளிதில் அடையாதது, மன்னிக்க முடியாத குற்றமாகும்" என்று இந்திய மட்டைவீச்சாளர்களை விமர்சித்துப் பேசியிருந்தார் கங்குலி.
இந்திய அணி வீரர்களை இவ்வாறு விமர்சித்துப் பேசிய குற்றத்திற்காக, சனிக்கிழமை நடைபெறவிருக்கும்இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து கங்குலி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்றுஇந்திய கிரிக்கெட் போர்டு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
ஏற்கனவே, நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட தொடர்பால், சரியாகவே விளையாடாமல் சொற்ப ரன்களுக்குஆட்டமிழந்து கொண்டிருந்தார் கங்குலி. இதனால் கிரிக்கெட் ரசிகர்களின் விமர்சனத்திற்கும் ஆளாகிய கங்குலிக்கு,இந்த "ஒரு நாள் சஸ்பெண்ட்" அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மேலும் ஒரு கரும்புள்ளியாகி விட்டது.












Click it and Unblock the Notifications