பூலன்தேவி கொலை: முக்கியக் குற்றவாளி கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பூலன்தேவி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பங்கஜ் என்ற ஷேர்சிங் ராணா வெள்ளிக்கிழமைபிடிபட்டார்.

பூலன்தேவியைக் கொன்ற பின்னர் கொலையாளிகள் தப்பிச் சென்றது இவருக்குச் சொந்தமான கரும்பச்சை நிறமாருதி காரில் தான். பங்கஜ் என்று முன்பு குறிப்பிடப்பட்டவரும் இவர் தான்.

டேராடூனில் இவர் பிடிபட்டார். இவருடன் ரவீந்தர் என்ற இன்னொரு நபரும் பிடிபட்டுள்ளார். இருவரும்டெல்லிக்கு கொண்டு வரப்படுகின்றனர்.

பூலன்தேவியை சுட்டுக் கொல்ல நாங்கள் தான் ஏற்பாடு செய்தோம் என ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பூலன்தேவி கொல்லப்பட்ட அன்று அவரை காலையில் நாடாளுமன்றத்துக்கு ராணா தான் அழைத்துச் சென்றார்.

பிற்பகலில் பூலன்தேவி இன்னொரு எம்.பியின் காரில் வீட்டுக்குத் திரும்பினார்.

அப்போது ராணாவின் காரிலிருந்து குதித்த 3 பேர் பூலன்தேவியை சுட்டுக் கொன்றனர். இதையடுத்துகொலையாளிகளை ராணா தனது காரிலேயே அங்கிருந்து அழைத்துக் கொண்டு தப்பினார்.

காரை 500 மீட்டர் தூரத்தில் ஓரிடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி ஓடினர்.

இப்போது பங்கஜ் என்ற ராணா பிடிபட்டதன் மூலம் பூலன்தேவியின் கொலைக்கான காரணம் விரைவில்தெரிந்துவிடும்.

ரூர்கி நகரைச் சேர்ந்த ராணா மதுக்கடை உரிமையாளராவார்.

பூலன்தேவி கொலை நடந்த அன்று அவரைச் சந்திக்க ரூர்கியில் இருந்து கஷ்யப் என்பவரும் அவரது மனைவிஉமாவும் வந்தனர். இவர்களை தனது காரில் பூலன்தேவியின் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தவர் ஷேர்சிங் ராணாஎன்ற பங்கஜ் தான்.

பூலன்தேவி கொல்லப்பட்டபோது இந்தத் தம்பதி பூலன் தேவியின் வீட்டில் தான் இருந்தது. இப்போது இந்தத்தம்பதி கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில்கொலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இவர்களுக்கு பங்கஜின் கொலைத் திட்டம் குறித்து ஏதும்தெரியாது என போலீசார் கருதுகின்றனர்.

ஷ்ேரசிங் ராணா பலமுறை பூலனின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளதாகவும், பூலனுக்கு அவர் மிகவும் தெரிந்த நபர்தான் எனவும் கூறப்படுகிறது.

பூலன் உடல் தகனம்:

கொலை செய்யப்பட்ட பூலன்தேவியின் உடல் வியாழக்கிழமை இரவு உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூரில்பலத்த பாதுகாப்புக்கு இடையே தகனம் செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் போராட்டம்:

தங்களது கட்சியைச் சேர்ந்த பூலன்தேவி எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்றத்தைநடத்தவிடாமல் போராட்டம் நடத்துவோம் என சமாஜ்வாடிக் கட்சி அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+