சிறைக்குத் திரும்பினார் சுதாகரன்
சென்னை:
3 நாள் ஜாமீனில் விடுதலையான முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் வியாழக்கிழமைமாலை மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.
இவர் நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தி சத்யலக்ஷ்மியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.
இந்நிலையில் சிவாஜி இறந்தவுடன், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுசெய்திருந்தார். அதன்படி, அவருக்கு 3 நாள் நிபந்தனை ஜாமீன் அளிக்கப் பட்டது.
சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன், சிவாஜி வீட்டிற்கு சென்றார் சுதாகரன். அங்கு தன் மனைவி மற்றும்அனைத்து உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடினார்.
வியாழக்கிழமையுடன் நீதிமன்றம் அளித்த 3 நாள் கெடு முடிவடைந்தது. அதன்படி வியாழக்கிழமை மாலை 4.30மணிக்கு கோர்டில் ஆஜர்படுத்தப் பட்டார்.
பிறகு போலீசார் அவரை பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.