For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 7 ஜவுளிக் கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் அடுத்தடுத்து உள்ள 7 ஜவுளிக் கடைகளில் வெள்ளிக்கிழமை புகுந்த கொள்ளையர்கள் ரூ.2 லட்சம்பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

சென்னை பாரீஸ் கார்னர் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. பகல் நேரத்தில் எப்போதும் பரபரப்பாகஇருக்கும் இந்தப் பகுதி, இரவு 11 மணிக்கு மேல் ஆள் அரவமின்றி அமைதியாக இருக்கும்.

இப்பகுதியில் உள்ள கோடவுன் தெருவில் உள்ள ஒரு ஜவுளிக் கடையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளேபுகுந்த கொள்ளையர்கள், அங்குள்ள கஜானாவையும் உடைத்து, அதிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்தனர்.

அருகில் உள்ள மற்ற 6 ஜவுளிக் கடைகளையும் இதைப் போலவே உடைத்து, பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்அந்தக் கொள்ளையர்கள் என்று போலீசார் கூறினர்.

இதே பகுதியில்தான், கடந்த சில நாட்களுக்கு முன், இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X