பூலன்தேவி கொலை: மேலும் 3 பேர் கைது
சகாரன்பூர் (உத்தரப் பிரதேசம்):
சமாஜ்வாடி கட்சியின் எம்.பியும் முன்னாள் கொள்ளைக்காரியுமான பூலன்தேவியை சுட்டுக் கொன்ற மேலும் 3கொலையாளிகளும் பிடிபட்டனர்.
இவருக்கு உதவியாக இருந்த ரஜீந்தர், சேகர், ரஜ்பீர் ஆகிய மூவரும் இப்போது பிடிபட்டுள்ளனர். தலைமறைவாகஇருந்த இவர்கள் இன்று (திங்கள்கிழமை) திடீரென சகாரன்பூர் நீதிமன்றம் வந்தனர். அங்கு சரணடைய முயன்றனர்.ஆனால், நீதிபதி இவர்களின் கோரிக்கையை நிராகரித்ததையடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோதுசிறப்புப் போலீஸ் படை இவர்களைக் கைது செய்தனர்.
டெல்லியில் பூலனைக் கொன்றுவிட்டு ஷேர்சிங் தனது சொந்த ஊரான டேராடூனுக்கு தப்பிவிட, இவர்கள் மூவரும்ரிஷிகேசுக்குத் தப்பினர். இவர்கள் மூவரும் மீரட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் ஷேர்சிங் ராணாவின் சகோதர்களான விக்ரம், ராஜூ இருவரும் பூலன் கொலைக்குப் பின்தலைமறைவாகிவிட்டனர். இவர்களுக்கு ராணாவின் கொலைத் திட்டம் குறித்து முன்பே தெரியும் என போலீஸ்சந்தேகிக்கிறது.
கொலைக்கு இன்னொரு காரணம்:
தனது ஜாதியைச் சேர்ந்த 22 தாகூர்களைக் கொலை செய்ததால் தான் பூலன்தேவியைக் கொலை செய்தேன் என்றுகூறியுள்ள ராணா இன்னொரு காரணமும் கூறியுள்ளார்.
தான் எம்.பியாக விரும்பியதாகவும், பூலன்தேவியைக் கொன்றால் தாகூர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில்போட்டியிட்டு தன்னால் எம்.பியாக முடியும் என்பதால் கொலை செய்ததாகவும் விளக்கியுள்ளார் ராணா.












Click it and Unblock the Notifications