பதவியை ராஜினாமா செய்கிறேன்: பிரதமர் வாஜ்பாய் அறிவிப்பு
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருக்கத் தான் தவறிவிட்டதால் பிரதமர் பதவியைராஜினாமா செய்வதாக வாஜ்பாய் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கூட்டணியில் உள்ள ஒரு கட்சியே தன்னை மிகக் கடுமையாக விமர்சித்ததையடுத்து பதவியை ராஜினாமாசெய்வதாக வாஜ்பாய் அறிவித்தார்.
இதையடுத்து மூத்த பா.ஜ.க. தலைவரும் உள்துறை அமைச்சருமான அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங், செய்தித்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் பிரதமரின் இல்லத்துக்கு விரைந்தனர்.
ராஜினாமா செய்ய வேண்டாம் என வற்புறுத்தினர். ஆனால், அவர்கது கோரிக்கையை ஏற்க வாஜ்பாய்மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து நாளை (புதன்கிழமை) உடனடியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைடெல்லியில் கூட்ட அத்வானியும் பிற அமைச்சர்களும், பா.ஜ.க தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர்.
பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என தேசிய ஜனநாயக் கூட்டணித் தலைவர்கள் மூலமாக பிரதமருக்குக்கோரிக்கை விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications