யூ.டி.ஐ. ஊழலில் பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்பு- சிவசேனை குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

யூ.டி.ஐ. ஊழல் தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள அதன் முன்னாள் தலைவர் பி.எஸ்.சுப்பிரமணியம் பல முறை பிரதமர் அலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என சிவசேனைக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

சிவசேனைக கட்சியின் மூத்த எம்.பியும் அக் கட்சித் தலைவர் பால் தாக்கரேயின் வலது கரமுமான சஞ்சய் நிரூபம்இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி சிவசேனை என்பதுகுறிப்பிடத்தக்கது.

அதுவும் நாடாளுமன்றத்திலேயே சஞ்சய் நிரூபம் பிரதமர் அலுவலகம் மீது குற்றம் சாட்டிார். தனது குற்றச்சாட்டில்அவர் கூறியதாவது:

பதவ நீக்கம் செய்யப்பட்ட பி.எஸ். சுப்பிரமணியம் ஜூலை 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை மும்பையிலிருந்துமூன்று முறை டெல்லியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதில் 2 முறை பிரதமர் அலுவலகத்தைத்தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதில் ஒருமுறை பிரதமருக்கு மிக நெருக்கமான நபர் ஒருவருடன் சுப்பிரமணியம் பேசியுள்ளார். அந்த நபர்மத்தியத் திட்டக் கமிஷனில் உறுப்பினராக உள்ளார்.

கடந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மத்திய நிதித்துறை செயலாளர்சுப்பிரமணியத்தை பல முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நிலைமை இப்படியிருக்க சுப்பிரமணியத்தின்நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என பிரதமர் அலுவலகமும் நிதியமைச்சரும் சொல்வதை நம்பமுடியவில்லை.

இந்த விவகாரம் குறித்து நான் பலமுறை பிரதமரிடமும், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவிடமும் விளக்கம்கேட்டேன். ஆனால், அவர்களிடமிருந்து உருப்படியாக எந்த பதிலும் வரவில்லை.

கூட்டணியில் உள்ள கட்சியின் உறுப்பினரையே பிரதமர் இப்படி நடத்தியது கடும் கண்டனத்துக்குறியது.

தனியாகக் கேட்டு விளக்கம் கிடைக்காததால் தான் நாடாளுமன்றத்தில் எல்லோர் முன்னிலையிலும் இதை நான்வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அரசை ஆதரிக்கிறோம் என்பதற்காக அவர்கள் எதைச் செய்தாலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் என்னமுடிவெடுத்தாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யூ.டி.ஐயில் பல லட்சம் பேர் முதலீடு செய்திருக்கிறார்கள்.அவர்களின் முதலீட்டுக்கு அரசு தான் பதில் சொல்ல வேண்டும். ஊழல் நடந்தால் அதைத் தட்டிக் கேட்கசிவசேனைக்கு உரிமை உண்டு.

இவ்வாறு சஞ்சய் நிரூபம் கூறினார்.

சிவ சேனை உறுப்பினரின் இந்தக் குற்றச்சாட்டை பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உள்ளஎம்.பிக்கள் அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

சிவசேனையின் இந்தக் குற்றச்சாட்டையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க் கட்சிகள் கடும்அமளியில் இறங்கியுள்ளன.

நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ராஜ்யசபாவில் இன்று இது குறித்து விளக்கம் அளித்தார். பங்குச் சந்தையில்ஏற்பட்ட தேக்கத்தினால் தான் யூ.டி.ஐயின் பங்கு விலையும் சரிந்தது. இதில் ஊழல் ஏதும் நடக்கவில்லை என்றார்.

ஆனால், சின்ஹாவின் விளக்கத்தை ஏற்காத எதிர்க் கட்சிகள், அவரை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரிவலியுறுத்தின.

எதிர்க் கட்சிகளின் அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+