மத்திய அரசை உலுக்கும் யூ.டி.ஐ. ஊழல்
டெல்லி:
யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா (யூ.டி.ஐ.) ஊழலில் பிரதமர் அலுவலகத்துக்கும் தொடர்பு உள்ளதாக சிவசேனைக்கட்சி குற்றம் சாட்டியதையடுத்தே தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளார்.
அரசு நிறுவனமான யூ.டி.ஐயின் இந்த அறிவிப்பு குறித்து தனக்குக் கூட பத்திரிக்கைகள் மூலம் தான் செய்திதெரியும் என மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறினார். ஆனால், இதில் பின்னணியில் ஏதோ பெரியஊழல் நடந்திருக்கிறது என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.
மேலும் யூ.டி.ஐ. நிறுவனம் பல மோசடி நிறுவனங்களில் நிதி முதலீடு செய்துள்ள விவரமும் தெரியவந்தது. குறிப்பாகசைபர்ஸ்பேஸ் என்ற நிறுவனத்தில் ரூ. 64 கோடியளவுக்கு நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மிகப்பெரிய மோசடி நிறுவனம் என்று தெரிந்தும் இதில் பணத்தை யூ.டி.ஐ. முதலீடு செய்தது.
ஆனால், இது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார். இதை நம்பத் தயாராகஇல்லாத எதிர்க் கட்சிகள் யஷ்வந்த் சின்ஹா ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி வருகின்றன.
இந் நிலையில் இரு வாரங்களுக்கு முன் யூ.டி.ஐயின் தலைவர் சுப்பிரமணியத்தை பதவி நீக்கம் செய்தது மத்தியஅரசு. அவரது வீட்டிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது. அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சைபர்ஸ்பேஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சில மூத்த பா.ஜ.க.தலைவரகளுக்கும் தொடர்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந் நிலையில் யூ.டி.ஐ. ஊழலில் பிரதமர் அலுவலகத்துக்கே நேரடித் தொடர்புள்ளதாக தேசிய ஜனநாயகக்கூட்டணியில் உள்ள சிவசேனைக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
எதிர்க் கட்சிகள் கூட சொல்லாத ஒரு மிகப் பெரிய குற்றச்சாட்டை சிவசேனை கூறியுள்ளது.
இதையடுத்து இது குறித்து விவாதிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) பாரதீய ஜனதா கட்சியின் எம்.பிக்கள் கூட்டம்டெல்லியில் அவசரமாகக் கூட்டப்பட்டது. அதில் பேசிய வாஜ்பாய், கூட்டணிக் கட்சிகளை ஒற்றுமையாகவைத்திருக்க நான் தவறிவிட்டேன். எனவே, ராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!











Click it and Unblock the Notifications