கேரளா: எரிகல் வெடித்துச் சிதறியதால் சிவப்பு மழை
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
வானத்தில் எரிகல் வெடித்துச் சிதறியதால்தான் கேரளாவில் சிவப்பு நிற மழை பெய்தது என்று ஆராய்ச்சியாளர்கள்கூறினர்.
அந்த நீரை சசிகுமார் என்ற விஞ்ஞானி ஆராய்ச்சி செய்தார். ஆராய்ச்சியின் முடிவில் அவர்வெளியிட்டுள்ளதகவல்கள்:
வானத்தில் எரிகல் வெடித்துச் சிதறியதால் , இதுபோன்ற சிவப்பு நிற மழை பெய்துள்ளது. பூமிக்கு மிக அருகில்எரிகல் ஒன்று கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து வந்துள்ளது. அப்போது திடீரென்று அது வெடித்துமேகத்துகள்களுடன் கலந்துவிட்டது. இதனால்தான் அந்தச் சமயத்தில் பெய்த மழை நீர் சிவப்பாகக்காட்சியளித்திருக்கிறது.
அந்தக் கல்லின் எடை சுமார் 1000 கிலோ இருக்கலாம். கல் வெடித்த சத்தம் இடிச்சத்தம் போல அப்பகுதிமக்களுக்குக் கேட்டிருக்கிறது. பிறகு சிறிது நேரத்தில் சிவப்புக் கலரில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது என்று அந்தவிஞ்ஞானி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications