பள்ளி மாணவிகளைக் கடத்தி நகை கொள்ளையடித்த பெண்
சென்னை:
சென்னையில் பள்ளி மாணவிகளைக் கடத்திய ஒரு பெண் அவர்களிடம் இருந்த நகைகளைப் பறித்துக் கொண்டுதப்பினார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு பெண் இந்த மாணவிகளிடம் தன்னை ஆசிரியை ஒருவரின் உறவினர் என்றுகூறியுள்ளார். பின்னர் அவர்களைத் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
இதையடுத்து மாணவிகளும் அவருடன் சென்றார்கள். ஆட்டோவில் அவர்களை அழைத்துச்சென்ற அந்தப் பெண்மாம்பலம் ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு போனபின் நகைகளைக் கழற்றித் தருமாறும், நகைகளுடன்வீட்டுக்குச் செல்லவேண்டாம் என்றும் சொன்னார்.
இதையடுத்து அவர்களும் அந்தப்பெண்ணை நம்பி நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர். பின்னர் இதோ வருகிறேன்என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் சென்று விட்டார்.
நகைகளை இழந்து வீட்டிற்குச் செல்ல வழி தெரியாமல் தவித்தத அந்த மாணவிகளை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர்போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவர்களது பெற்றோருக்குத் தகவல் கொடுத்து,அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்தனர்.