காஷ்மீரில் தீவிரவாதிகள் ஆதிக்கம் இல்லை: ராணுவம்
டெல்லி:
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் கை ஒங்கியிருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும்தவறு என்று ராணுவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் 165 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.இப்பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒடுக்கி விட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் ஜுன் மாதம் 219 தீவிரவாதிகளும், ஜுலை மாதம் 230 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்த 11 ஆண்டு காலத்தில், இந்த அளவில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை.
ரஜோரி-பூஞ்ச் பகுதிகளில் தீவிரவாதிகளின் கை ஓங்கி இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் 32 முறை ஊடுறுவல்காரர்களின் முயற்சி முறியடிக்கப் பட்டுள்ளது.
ராணுவ வீரர்களின் திறமையால் ரஜோரி-பூஞ்ச் பகுதியில் இருந்து தீவிரவாதிகள் துரத்தப்பட்டுள்ளனர்.தீவிரவாதிகளின் ரேடியோ பேச்சை இடைமறித்து கேட்கும் போது, தீவிரவாதிகள் தரப்பில் மேலும்ஏராளமானவர்கள் இறந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த இறப்புகளினால், தீவிரவாதிகள் பெரும்பாதிப்படைந்துள்ளனர்.
தீவிரவாதிகளின் வன்முறை சம்பவங்களும் இந்த 2 பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்றுஅந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.