எல்லைப் பகுதிகளில் பாக். உளவு விமானங்கள்
ஜெய்சால்மர் (ராஜஸ்தான்):
பாகிஸ்தானின் ராணுவ உளவு விமானங்கள் ராஜஸ்தான் பகுதியில் வேவு பார்ப்பதாக ராஜஸ்தானின் எல்லைபாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஆக்ரா உச்சி மாநாடு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பின்பு ராஜஸ்தானை ஒட்டியுள்ள நன்சனா மற்றும்கிருஷ்ணதார் பால்ஜ் போன்ற பகுதிகளில் பாகிஸ்தான விமானங்கள் வேவு பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த விமானங்களில் நவீன காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இந்திய எல்லைப் பகுதியை புகைப்படம்எடுத்து வருகின்றன.
இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளையும், பி.எஸ்.எப். எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும்கவனிப்பதற்காக இந்த உளவு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் இந்திய எல்லைக்குள் எளிதாக நுழைய வாய்ப்புள்ளதா என்பது பற்றியும்,இந்தியப் பகுதிக்குள் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்த வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் தீவிரமாகவேவு பார்த்து வருகின்றன இந்த உளவு விமானங்கள்.
இந்த உளவு விமானங்கள், பகல் நேரங்களில் கூட, எல்லைப் பகுதியிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திற்குஇந்திய வானில் பறந்து செல்கின்றன என்றார் அந்த அதிகாரி.
இந்த உளவு விமானங்கள் முழுக்க முழுக்க ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.