மதுரை அருகே விபத்து: இலங்கை தமிழ் தம்பதி பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை, சமயநல்லூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் இலங்கை தமிழ் தம்பதியினர்பலியாயினர்.

இலங்கையில் வசித்து வந்த இந்தத் தம்பதியினர், இலங்கையில் போர் தீவிரமாகியபோது, அங்கிருந்து வெளியேறி,ஸ்விட்சர்லாந்து நாட்டில் குடியேறினர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இவர்கள் சமீபத்தில் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காக மதுரை வந்தனர். பிறகு, தங்கள் உறவினர்களுடன் ஒருவேனில் சுற்றுலா கிளம்பினர்.

மதுரை-சமயநல்லூருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த அரசு பஸ்ஸுடன் இந்தவேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்தக் கோர விபத்தில், அந்த இலங்கை தமிழ் தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.அவர்களுடைய 2 பெண் குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்துசமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+