மதுரை அருகே விபத்து: இலங்கை தமிழ் தம்பதி பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை, சமயநல்லூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் இலங்கை தமிழ் தம்பதியினர்பலியாயினர்.
இவர்கள் சமீபத்தில் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காக மதுரை வந்தனர். பிறகு, தங்கள் உறவினர்களுடன் ஒருவேனில் சுற்றுலா கிளம்பினர்.
மதுரை-சமயநல்லூருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த அரசு பஸ்ஸுடன் இந்தவேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்தக் கோர விபத்தில், அந்த இலங்கை தமிழ் தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.அவர்களுடைய 2 பெண் குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்துசமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications