For Daily Alerts
Just In
மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
டெல்லி:
ஏர்வாடி மனநோயாளிகள் பலியானது பற்றி விளக்கம் கேட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மனிதஉரிமைகள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள ஒரு மனநலகாப்பகத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 25 மனநோயாளிகள் பலியானார்கள். 5 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
இச்சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதையறிந்த தேசிய மனித உரிமைகள் கமிஷன் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஒரு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
அதில், இச்சம்பவம் குறித்து ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றுகேட்கப்பட்டிருக்கிறது.
Comments
arrest government community village erwadi tamilnadu monday asylum marina retarded rehabilitation dargah national human rights commission
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]