மதுரையில் சிறுவன் கொலை; நகை-பணம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில், வீட்டிலிருந்த 14 வயது சிறுவனைக் கொன்று, நகை-பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப்போலீசார் தேடி வருகின்றனர்.


மதுரை பசும்பொன் நகரில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில், திங்கள்கிழமை பகல் நேரத்தில் புகுந்தது ஒருகொள்ளைக்காரக் கும்பல். உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அன்று விடுமுறை எடுத்திருந்தான் அந்தச்சிறுவன். அவனுடைய வீட்டினுள் புகுந்த கும்பல், நகை-பணத்தைக் கொடுக்குமாறு அந்தச் சிறுவனைமிரட்டியுள்ளது.

சிறுவன் மறுக்கவே, உடனே அவனைக் கழுத்தை நெறித்து அந்தக் கும்பல் கொன்று விட்டது. பிறகு, பீரோவில்இருந்த 30 பவுன் தங்க நகைகளையும் ரூ.35,000 பணத்தையும் கொள்ளையடித்துச் சென்று விட்டது அந்தக்கும்பல்.

கொலை-கொள்ளை நடந்த அந்த நேரத்தில், அந்தச் சிறுவனின் பெற்றோர் எங்கோ வெளியில் சென்றுவிட்டதாகக்கூறப்படுகிறது. வீட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள வீடும் காலியாகத்தான் இருந்துள்ளது. மாலையில் அந்தச் சிறுவனின்சகோதரி வந்து பார்த்த பிறகுதான், விஷயம் வெளியில் தெரிந்திருக்கிறது.

சம்பவம் நடந்த இடத்திற்கு, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார், தீவிரவிசாரணை நடத்தினார்கள்.

இந்தக் கொள்ளைக் கும்பலைப் பிடிப்பதற்காக, 3 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களைத் தேடும் பணிமுடுக்கி விடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+