ராமதாசுடன் பேச எனக்கு தகுதி இல்லை: திருமாவளவனின் கிண்டல்
மதுரை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் நம்பத்தகுந்த கொள்கை உடையவர் அல்ல. அதனால் அவரைக்கூட்டணியில் சேர்க்கவே கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன்கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பிரிந்து சிலகாலம் எந்த முடிவையும் எடுக்காமலிருந்தது. அப்போதுமுதல் இன்று வரை பா.ம.க.வை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று கூறிவருபவர்திருமாவளவன்.
ஆனால், பா.ம.க. தலைவர் ராமதாஸ் நேராக டெல்லிக்குச் சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துக் கூட்டணியில்இணைந்து விட்டது. முதலில் முறையாக பா.ம.க இன்னும் கூட்டணியில் சேரவில்லை என்று சொல்லி வந்த பாரதீயஜனதா, ஒருவழியாக பா.ம.க வை இணைத்துக் கொண்டதாக ஒத்துக் கொண்டுள்ளது.
ஆனால், இந்தக் கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை வகிக்கும் திமுக இது பற்றி இன்னும் முடிவுசெய்யாமலிருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் எதிர்ப்பு.
விடுதலைச் சிறுத்தைகள் விலகினால், திமுகவுக்கு இழப்பு தான் ஏற்படும், அதே நேரத்தில் பா.ம.க.வைச் சேர்ப்பதால்பா.ம.க மட்டும்தான் லாபமடையும் என்று திமுகவினர் கருதுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருமாவளவன் மதுரையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திருமாவளவனுக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் இல்லை. இருந்தாலும் அவருடன் பேசத் தயார் என்று ராம்தாஸ்கூறியிருக்கிறார்.
நம்பிக்கை துரோகம் என்ற கொள்கை எங்களுக்கு இல்லை. ஆனால், ராம்தாஸ் நம்பத் தகுந்த கொள்கைஉடையவர் அல்ல. அரசியல் ஆதாயத்திற்காக முதுகில் குத்தக் கூடியவர். எனவே, அவருடன் பேச நான் தகுதிஇல்லாதவன்தான்.
மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க வைச் சேர்க்கவே கூடாது.
இது குறித்து திமுக தான் முடிவெடுக்க வேண்டும். பிரதமர் வாஜ்பாய், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்ணான்டஸ் ஆகியோரது முடிவைவிட, திமுக தலைவர் கருணாநிதியின் முடிவு தான் எங்களுக்கு முக்கியம்.
திமுக வின் முடிவுக்குப் பின், எங்களது முடிவை நாங்கள் அறிவிப்போம்.
மேலும், தாழ்த்தப்பட்டோருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க, அரசாணை 44யை அமல்படுத்த மாநில அரசுமுன்வர வேண்டும்.
இந்த நாட்டில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபையில்நடக்கும் மாநாட்டில் எடுத்துக் கூறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications