ராமதாசுடன் பேச எனக்கு தகுதி இல்லை: திருமாவளவனின் கிண்டல்
மதுரை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் நம்பத்தகுந்த கொள்கை உடையவர் அல்ல. அதனால் அவரைக்கூட்டணியில் சேர்க்கவே கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன்கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பிரிந்து சிலகாலம் எந்த முடிவையும் எடுக்காமலிருந்தது. அப்போதுமுதல் இன்று வரை பா.ம.க.வை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று கூறிவருபவர்திருமாவளவன்.
ஆனால், பா.ம.க. தலைவர் ராமதாஸ் நேராக டெல்லிக்குச் சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துக் கூட்டணியில்இணைந்து விட்டது. முதலில் முறையாக பா.ம.க இன்னும் கூட்டணியில் சேரவில்லை என்று சொல்லி வந்த பாரதீயஜனதா, ஒருவழியாக பா.ம.க வை இணைத்துக் கொண்டதாக ஒத்துக் கொண்டுள்ளது.
ஆனால், இந்தக் கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை வகிக்கும் திமுக இது பற்றி இன்னும் முடிவுசெய்யாமலிருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் எதிர்ப்பு.
விடுதலைச் சிறுத்தைகள் விலகினால், திமுகவுக்கு இழப்பு தான் ஏற்படும், அதே நேரத்தில் பா.ம.க.வைச் சேர்ப்பதால்பா.ம.க மட்டும்தான் லாபமடையும் என்று திமுகவினர் கருதுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருமாவளவன் மதுரையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திருமாவளவனுக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் இல்லை. இருந்தாலும் அவருடன் பேசத் தயார் என்று ராம்தாஸ்கூறியிருக்கிறார்.
நம்பிக்கை துரோகம் என்ற கொள்கை எங்களுக்கு இல்லை. ஆனால், ராம்தாஸ் நம்பத் தகுந்த கொள்கைஉடையவர் அல்ல. அரசியல் ஆதாயத்திற்காக முதுகில் குத்தக் கூடியவர். எனவே, அவருடன் பேச நான் தகுதிஇல்லாதவன்தான்.
மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க வைச் சேர்க்கவே கூடாது.
இது குறித்து திமுக தான் முடிவெடுக்க வேண்டும். பிரதமர் வாஜ்பாய், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்ணான்டஸ் ஆகியோரது முடிவைவிட, திமுக தலைவர் கருணாநிதியின் முடிவு தான் எங்களுக்கு முக்கியம்.
திமுக வின் முடிவுக்குப் பின், எங்களது முடிவை நாங்கள் அறிவிப்போம்.
மேலும், தாழ்த்தப்பட்டோருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க, அரசாணை 44யை அமல்படுத்த மாநில அரசுமுன்வர வேண்டும்.
இந்த நாட்டில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபையில்நடக்கும் மாநாட்டில் எடுத்துக் கூறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்.. அன்புமணி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி! -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சவுமியா, விருத்தாசலத்தில் தமிழரசி! பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications