For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1993ல் விமானம் கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சென்னை விமானத்தைக் கடத்தியவருக்கு டெல்லிநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

ஹரிசிங் என்ற அந்த நபர், 1993ம் ஆண்டு டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தைக்கடத்த முயன்றார். அவர் பைலட்டிடம், தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்த தற்கொலைப்படை வீரன்என்றும், விமானத்தை பாகிஸ்தானுக்கு திருப்பும் படியும் கட்டளையிட்டார்.

ஆனால், பாகிஸ்தான் போகுமளவுக்கு விமானத்தில் பெட்ரோல் இல்லை என்று பைலட் கூறினார். இதனால் விமானம், பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்தத்தகவலறிந்ததும், அப்போது பஞ்சாப் மாநில டி.ஜி.பி. யாக இருந்த கே.பி.எஸ். கில் ஹரிசிங்குடன் பேச்சுநடத்தினார்.

அதைத் தொடர்ந்து ஹரிசிங் போலீசிடம் சரணடைந்தார். பிறகு விசாரித்ததில் அவர் விடுதலைப்புலி இல்லைஎன்றும், மக்களிடம் பிரபலமடையவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து, அவர் கைதுசெய்யப்பட்டு, டெல்லி கோர்ட்டில் அவர் மேல் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கவுபா குற்றவாளி ஹரிசிங்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும்விதித்துத் தீர்ப்பளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X