1993ல் விமானம் கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை
டெல்லி:
மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சென்னை விமானத்தைக் கடத்தியவருக்கு டெல்லிநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
ஆனால், பாகிஸ்தான் போகுமளவுக்கு விமானத்தில் பெட்ரோல் இல்லை என்று பைலட் கூறினார். இதனால் விமானம், பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்தத்தகவலறிந்ததும், அப்போது பஞ்சாப் மாநில டி.ஜி.பி. யாக இருந்த கே.பி.எஸ். கில் ஹரிசிங்குடன் பேச்சுநடத்தினார்.
அதைத் தொடர்ந்து ஹரிசிங் போலீசிடம் சரணடைந்தார். பிறகு விசாரித்ததில் அவர் விடுதலைப்புலி இல்லைஎன்றும், மக்களிடம் பிரபலமடையவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து, அவர் கைதுசெய்யப்பட்டு, டெல்லி கோர்ட்டில் அவர் மேல் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கவுபா குற்றவாளி ஹரிசிங்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும்விதித்துத் தீர்ப்பளித்தார்.