உடைக்கப்படும் விலங்குகள், சங்கிலிகள்

Subscribe to Oneindia Tamil

ஏர்வாடி:

மனநல காப்பகங்களில் இருக்கும் நோயாளிகளுக்கு பூட்டப்பட்டிருக்கும் விலங்குளை அகற்ற வேண்டும் எனராமநாதபுரம் ஆட்சி தலைவர் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்களுக்கு பூட்டப்பட்டிருந்த விலங்குகள்அகற்றப்பட்டன.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது உறவினர்கள் இங்கு இருக்கும் மனநல காப்பகத்தில் சேர்த்துவிடுகின்றனர். இந்த மண்ணில் சோர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றால் அவர்கள் நோய் குணமாகிவிடும் என்றநம்பிக்கை மக்கள் மனதில் நிலவி வருகிறது.

பாஷா மனநல காப்பகம் என்ற தனியார் மனநல காப்பகத்தில் கடந்த திங்கள்கிழமை திடீரென தீ விபத்துஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மனநல காப்பகத்தில் இருந்த 27 பேர் இறந்து போனார்கள். மேலும் பலரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் மருத்துவமனையில் இறந்து போனதை அடுத்துதீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்ததால்தான் அவர்களால் தீ விபத்துஏற்பட்ட போது தப்பிக்க முடியவில்லை என்று தெரியவந்தது.

இதை அடுத்து தனியார் மனநல காப்பகத்தில் இருக்கும் நோயாளிகள் அனைவருக்கும் கால்களில்பூட்டப்பட்டிருக்கும் விலங்குகளை அகற்ற வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் விஜயகுமார்உத்தரவிட்டார்.

இதை அடுத்து வருவாய் துறை அதிகாரிகள் பலரும், விஜயகுமார் தலைமையில் மனநலம்பாதிக்கப்பட்டவர்களுக்கு பூட்டப்பட்டு வரும் விலங்குகளை உடைத்து எறிந்து வருகிறார்கள்.

ஆனாலும் மனநல காப்பகங்களை நடத்தி வருபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் விலங்குகள்உடைக்கப்பட்டால் அவர்கள் தப்பி விடுவார்கள் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் மன நல காப்பகங்களில் இருக்கும் பலரை அவர்களது உறவினர்கள் வீட்டுக்கு திரும்பஅழைத்துச் சென்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+