முந்தைய திமுக அரசு மீது மனித உரிமை கமிஷன் குற்றச்சாட்டு
டெல்லி:
ஏர்வாடி மனநல காப்பகங்களின் மோசமான நிலையை சரிசெய்யுமாறு கோரி, மனித உரிமை கமிஷன் அளித்தபரிந்துரையை கவனத்தில் கொள்ளவில்லை என்று மனித உரிமை கமிஷன் முந்தைய தி.மு.க. அரசு மீது குற்றம்சுமத்தி உள்ளது.
சென்ற 1998ம் ஆண்டு, ஏர்வாடி மனநல காப்பகத்தில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதாக கமிஷனுக்குகிடைத்த தகவலின் அடிப்படையில் மனநல காப்பகங்களின் செயல்பாட்டை மனித உரிமை கமிஷன் கூர்ந்துநோக்கி வந்தது.
அங்கு மனநல நோயாளிகளின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதும், அவர்கள் மனிதர்களாகவேநடத்தப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.என்று தமிழக அரசுக்கு சென்ற ஜனவரிமாதம் பரிந்துரை செய்து கடிதம்அனுப்பினோம். மேலும் நோயாளிகளுக்கு தக்க வசதிகள் செய்யப்படவேண்டும் என்றும், அது குறித்து மனிதஉரிமை கமிஷனுக்கு விரைவில் பதில் அனுப்பவேண்டும் என்றும் கூறி இருந்தோம். ஆனால் அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை.
திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மனநோயாளிகள் 27 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்குறித்து அறிக்கை ஒருவார காலத்தில் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதுஎன்று கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications