போலீஸ் டிரான்ஸ்பரெல்லாம் வேண்டாம்: கருணாநிதி
சென்னை:
காட்டுமிராண்டித்தனமாக போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள்கோரிக்கையே தவிர அவர்களை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை என்று தி.மு.க.தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார்.
என்னை கைது செய்த போதுகாட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை வேண்டும்என்பதுதான் நாங்கள் கேட்டுக் கொண்டது. அவர்களை மாற்ற வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை அல்ல.
போலீசார் அதிகாரிகளை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை என்று யாராவது கூறினால்அது தவறானது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இணைப்பு குறித்து நான் மீண்டும் கூறுவது இதுதான். முதலில் ராமதாஸ்வந்து என்னை சந்திக்கட்டும். அதன் பிறகு பா.ம.கவை தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்துமுடிவு செய்யப்படும்.
ராமதாஸ் என்னை வந்து ஏன் சந்திக்கவில்லை என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
ஜெயலலிதாவின் டெல்லி பயணம் ரத்தானதற்கு தனது உடல் நலக்குறைவே காரணம் என்று அவர் கூறியிருக்கிறார்.அவர் உடல்நலம் பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை, அது பண்பாகவும் இருக்காது என்று கருணாநிதிகூறினார்.