வாஜ்பாய் ராஜினாமா கோரி சென்னையில் காங்கிரஸ் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
யு.டி.ஐ.-யுஎஸ் -64 ஊழல் விஷயத்தில் பிரதமர் அலுவலகத்திற்கும் தொடர்பிருப்பதால் பிரதமர் வாஜ்பாய்ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி தமிழக காங்கிரஸ் கட்சியினர் கண்டன பேரணி ஒன்றைவியாழக்கிழமை சென்னையில் நடத்தினர்.
பேரணியில் இளங்கோவன் பேசும்போது:
யுடிஐ யுஎஸ்- 64 ஊழலில் பொதுமக்களின் கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இந்தஊழலில் பிரதமர் அலுவலகத்துக்கும் தொடர்பு உள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் வாஜ்பாய் தன்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். குறைந்தது நிதிஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவாவது ராஜினாமா செய்யவேண்டும்.
இந்தக் கண்டன பேரணியை எனது சொந்த லாபத்துக்காவோ, என்னை பிரபலப்படுத்திக் கொள்ளவோநடத்தவில்லை. நாட்டு மக்களின் நலத்திற்காகத்தான் நடத்தினேன் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications