For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய் ராஜினாமா கோரி சென்னையில் காங்கிரஸ் பேரணி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

யு.டி.ஐ.-யுஎஸ் -64 ஊழல் விஷயத்தில் பிரதமர் அலுவலகத்திற்கும் தொடர்பிருப்பதால் பிரதமர் வாஜ்பாய்ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி தமிழக காங்கிரஸ் கட்சியினர் கண்டன பேரணி ஒன்றைவியாழக்கிழமை சென்னையில் நடத்தினர்.

இந்தக் கணடன பேரணிக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இந்தபேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ராயபுரம் மேம்பாலத்தில் தொடங்கிய இந்தபேரணி, சிங்காரவேலன் மாளிகை அருகே முடிவடைந்தது.

பேரணியில் இளங்கோவன் பேசும்போது:

யுடிஐ யுஎஸ்- 64 ஊழலில் பொதுமக்களின் கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இந்தஊழலில் பிரதமர் அலுவலகத்துக்கும் தொடர்பு உள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் வாஜ்பாய் தன்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். குறைந்தது நிதிஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவாவது ராஜினாமா செய்யவேண்டும்.

இந்தக் கண்டன பேரணியை எனது சொந்த லாபத்துக்காவோ, என்னை பிரபலப்படுத்திக் கொள்ளவோநடத்தவில்லை. நாட்டு மக்களின் நலத்திற்காகத்தான் நடத்தினேன் என்றார் இளங்கோவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X