For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சியில் பட்டப் பகலில் ரவுடி வெட்டிக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சியில் இன்று (வியாழக்கிழமை) பட்டப் பகலில் "குட்டை" ஜேம்ஸ் என்ற ரவுடியை 9 பேர் கொண்ட மற்றொருரவுடிக் கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் "குட்டை" ஜேம்ஸ். இவர் அப்பகுதியில் வெட்டு, குத்து, கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடி. அதனால் அப்பகுதியில் இவருக்குப் பல எதிரிகள் இருந்தனர்.

மேலும் கோர்ட்டில் இவர் மீது பல வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் ஆஜராவதற்காக, வியாழக்கிழமை காலை"குட்டை" ஜேம்ஸ் கோர்ட்டுக்கு மோட்டார் பைக்கில் போய்க் கொண்டிருந்தார்.

செல்லும் வழியில் 9 பேர் கொண்ட ஒரு ரவுடிக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ஜேம்சை வழிமறித்தது. ஜேம்ஸ்வண்டியை நிறுத்தியதும், அனைவரும் கையிலிருந்த ஆயுதங்களுடன் சரமாரியாக அவரைத் தாக்கினார்கள்.

இதில் உடலிலும், தலையிலும் பல வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் "குட்டை"ஜேம்ஸ் சம்பவஇடத்திலேயே பிணமானார். பிறகு, தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அது குறித்துத் தகவலறிந்ததும், போலீசார் விரைந்து செயல்பட்டு திருச்சி நகர் முழுவதும் சோதனையிட்டு, 3கொலையாளிகளைப் பிடித்தனர். எஞ்சிய 6 பேரையும் வலை வீசித் தேடிவருகின்றனர்.

பட்டபகலில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X