புலிகளின் ஆலோசகர் பிரான்சில் நுழைய தடை
கொழும்பு:
விடுதலை புலிகளின் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் பிரான்ஸ் நாட்டில்நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பல ஆண்டுகளாக இவர் பிரிட்டனில் வசித்து வந்தார். புலிகளின் தலையைகமும் லண்டனில்தான் இயங்கி வந்தது.
இந்நிலையில், தீவிரவாத இயக்கங்களுக்கு தடை விதித்த பிரிட்டன் அரசு, அங்கு விடுதலைப்புலிகள் இயக்கம்செயல்படவும் தடை விதித்து. இதனால் புலிகள் தலைமையகத்தையும், தனது குடியிருப்பையும் பிரான்ஸ் நாட்டுக்குமாற்றத் திட்டமிட்டார் பாலசிங்கம்.
பாலசிங்கம், சாந்தன் உள்ளிட்ட 5 பேருடன் பிரான்ஸ் செல்ல முயன்றுள்ளார். ஆனால், பாலசிங்கமும் அவரதுகூட்டாளிகளும் நுழைய பிரான்ஸ் அரசு தடை விதித்தது.
விடுதலை புலிகள் பிரச்சனை தொடர்பாக பிரான்ஸ் நாடும், இலங்கை அரசும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளில்தொடர்ந்து ஈடுபடுவதால் புலிகள் இயக்கத்திற்கு அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில், ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் ஆரம்பித்ததையடுத்து, அங்கிருந்துஇடம்பெயர்ந்த தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் குடியேறினர். அந்த நாடுகளில் ஒன்றுதான் பிரான்ஸ்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications