தொடரும் கொலைகள்: ராணுவக் கட்டுப்பாட்டில் காஷ்மீர்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக காஷ்மீர் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தத்தொடங்கியுள்ளதையடுத்து, காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ந் தேதி செஷ்நாக் பகுதியில் அமர்நாத் பக்தர்களை கொன்றனர். அடுத்து, இந்த மாதம் 4ந் தேதி 17அப்பாவி இந்துக்களை வரிசையாக நிற்க வைத்துக் கொன்று குவித்தனர். பிறகு, கடந்த 7ந் தேதியும்தீவிரவாதிகளின் பெரும் தாக்குதல் தொடர்ந்தது. ஜம்மு ரயில் நிலையத்தில் அப்பாவிப் பயணிகள் மீது திடீர்தாக்குதல் நடத்தி 11 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர்.

இவ்வாறு அப்பாவிப் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி, மதக்கலவரத்தை உருவாக்குவதே தீவிரவாதிகளின்நோக்கம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகள்அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது என்று உள்துறை அமைச்சர் அத்வானிஅறிவித்தார்.

மேலும், அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் காட்டுமிராண்டித்தனத்தை விடுதலைப்போர் என்று தீவிரவாதிகள்அறிவிக்கின்றனர். அதற்கு துணைபுரியும் அண்டை நாட்டின் செயலை நாம் மறைமுகமாக ஒடுக்கி வருகிறோம்.தொடர்ந்து தீவிரவாதத்தையும் ஒடுக்குவோம் என்றும் அத்வானி உறுதியளித்தார்.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை காஷ்மீரில் நடந்த குண்டுவீச்சுத் தாக்குதலில், ஒரு செருப்புத்தொழிலாளி கொல்லப்பட்டார். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர்.

இது தவிர, வடக்கு காஷ்மீரின் மலங்கம் என்ற இடத்தில் உள்ள ஒரு கோயிலில் பக்தர்கள் பூஜைசெய்துகொண்டிருந்தபோது, அவர்கள் மீது தீவிரவாதிகள் குண்டு வீசியதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+