தொடரும் கொலைகள்: ராணுவக் கட்டுப்பாட்டில் காஷ்மீர்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக காஷ்மீர் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தத்தொடங்கியுள்ளதையடுத்து, காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு அப்பாவிப் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி, மதக்கலவரத்தை உருவாக்குவதே தீவிரவாதிகளின்நோக்கம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகள்அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது என்று உள்துறை அமைச்சர் அத்வானிஅறிவித்தார்.
மேலும், அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் காட்டுமிராண்டித்தனத்தை விடுதலைப்போர் என்று தீவிரவாதிகள்அறிவிக்கின்றனர். அதற்கு துணைபுரியும் அண்டை நாட்டின் செயலை நாம் மறைமுகமாக ஒடுக்கி வருகிறோம்.தொடர்ந்து தீவிரவாதத்தையும் ஒடுக்குவோம் என்றும் அத்வானி உறுதியளித்தார்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை காஷ்மீரில் நடந்த குண்டுவீச்சுத் தாக்குதலில், ஒரு செருப்புத்தொழிலாளி கொல்லப்பட்டார். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர்.
இது தவிர, வடக்கு காஷ்மீரின் மலங்கம் என்ற இடத்தில் உள்ள ஒரு கோயிலில் பக்தர்கள் பூஜைசெய்துகொண்டிருந்தபோது, அவர்கள் மீது தீவிரவாதிகள் குண்டு வீசியதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications