ராமதாசுக்கு திருமாவளவன்-கிருஷ்ணசாமி பதிலடி
சென்னை:
பா.ம.க. தலைவர் ராமதாஸ் எங்கள் மீது எடுக்கும் எந்த நடவடிக்கையையும் சந்திக்கத் தயார் என்று திருமாவளவன்மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் ராமதாஸ் சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பதாககுற்றம் சாட்டினார்.
பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தலித் விரோத கட்சி என்றும் சந்தர்ப்பவாத கட்சி என்றும் திருமாவளவனும்,கிருஷ்ணசாமியும் தாக்கிப் பேசி வந்தார்கள். இதையடுத்து திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் தொடர்ந்துஅவதூறாகப் பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று ராமதாஸ் கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது:
1993ம் ஆண்டு மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டு என்னை இளம்பெரியார் என்றுபாராட்டினார். அனால், இன்று நாங்கள் அரசியலுக்கு வந்து ராமதாசின் சந்தர்ப்பவாதத்தை எல்லாம்அம்பலப்படுத்தி வருகிறோம். இதனால், அவர் ஆத்திரமடைந்து எங்களை தாக்கிப் பேசி வருகிறார்.
மேலும், அவருக்கு விடுதலைச்சிறுத்தைகளோடு இணக்கமாக இருக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லை.அதனால்தான் அவரைக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று வற்புறுத்தி வருகிறோம்.
மேலும் எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறிவருகிறார். அவருடைய எந்தநடவடிக்கையையும் சந்திக்க நாங்கள் தயார் என்று திருமாவளவன் கூறினார்.
கிருஷ்ணசாமி அறிக்கை:
பாட்டாளி மக்கள் கட்சியின் சமீபத்திய அணிமாறும் வேகத்தை நாங்கள் விமர்சித்தோம். இதை ராமதாஸ் ஒருஆலோசனையாக ஏற்றுக்கொண்டிருந்தால் நல்லது.
அதை விடுத்து அவசரகதியில் வார்த்தைகளை அள்ளித் தெளித்துவிட்டார். இதன்மூலம் அவர் தலித் கட்சிகளுக்குஎதிரானவர் என்பதை நிரூபித்துவிட்டார் என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications