சென்னை-பெல்ஜியம் விமான சேவை ரத்தாகாது
சென்னை::
சென்னை-பிரஸ்சல்ஸ் இடையேயான விமான சேவை எக்காரணம் கொண்டும்குறைக்கப்படாது என்றும் மாறாக அதிகமான விமானங்கள் இயக்கப்படும் என்றும்பெல்ஜியம் நாட்டின் சபீனா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
சபீனா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஸ்விஸ் ஏர் நிறுவனத்துடனும், பெல்ஜியம் அரசின்கூட்டமைப்புடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. சபீனா ஏர்லைன்ஸ் வாரந்தோறும்சென்னையில் இருந்து 3 விமானங்களை பிரஸ்சல்சுக்கு இயக்கி வருகிறது.
சபீனா ஏர்லைனஸ் நிறுவனத்தின் செயல்பாடு சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால்,பிரஸ்சல்ஸ்-சென்னை இடையேயான விமான சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாகசெய்திகள் வெளியிகியுள்ளது.
இந்த செய்தியை தவறானது. ஏ-340 விமானத்திற்கு பதிலாக ஏ-330 விமானம்இயக்கப்படும்.
வாரந்தோறும் சென்னையில் இருந்து 7 விமானங்களை இயக்க அனுமதி தருமாறு இந்தியஅரசை கேட்டுக் கொண்டுள்ளது.
மறுசீரமைப்பின் காரணமாக டோக்கியோவுக்கும், வாஷிங்டனுக்குமான விமானசேவையை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது என்றார்.