ஜெ. எதற்கும் பயப்படமாட்டாராம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எந்த சூழ்நிலைக்கும் நான் பயப்படமாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அப்போது அவரிடம் பல விஷயங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டார்கள். இன்னும் 3 மாதங்களுக்குள்சட்டப் பேரவைக்குள் நுழைய வேண்டுமே என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, நான் எதற்மும்அஞசுவதில்லை. அஞ்சவும் மாட்டேன் என்றார்.
பிரதமர் வாஜ்பாய் மற்றும் சோனியாவைச் சந்திக்கத் திட்டமிட்டு அவர்கள் நேரம் ஒதுக்காததால் டெல்லிசெல்லவில்லை என்று சொல்லப்படுகிறதே என்று கேட்கப்பட்டது.
அதற்கு ஜெயலலிதா, அவர்களிடம் நான் அப்பாயின்மெண்ட் கேட்கவே இல்லை என்றார்.
டான்ஸி வழக்கில் அதிகாரி ஒருவரின் திடீர் பல்டி குறித்து கேட்டதற்கு, இதையெல்லாம் பத்திரிக்கைகளிடம்விவாதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.
மேலும் வழக்கு தொடர்பாக நீதி மன்றத்தில் எனது வக்கீல் மூலமாகத் தெரிவிப்பேன் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications