இலவச செருப்பு ஊழலிலும் சாட்சிகள் பல்டி
சென்னை:
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மீதான இலவச செருப்பு ஊழல் வழக்கில், 3 அரசுத்தரப்பு சாட்சிகள் திடீர் பல்டி அடித்துள்ளனர்.
இந்த வழக்கு மூன்றாவது தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைவெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 3 சாட்சிகள் இந்திர குமாரிக்குஆதரவாக சாட்சி அளித்தனர். இந்த மூவரும் திமுக ஆட்சியின்போது இந்திரகுமாரிக்குஎதிராக சாட்சி அளித்திருந்தனர்.
நேற்று மூவரும் பல்டி அடித்தனர்.
இதில் பத்மாவதி என்பவர் சாட்சி அளிக்கும் போது, தன்னை போலீசார் விசாரணை செய்தபோது, என்ன விசாரித்தார்கள் என்பது குறித்து நினைவு இல்லை என்று கூறினார்.
இதையடுத்து நிர்மலா என்பவர் சாட்சி அளித்தார். இதற்கு முன் நான் செருப்பு தயாரித்துசப்ளை செய்தேனா என்பது நினைவில்லை என்றார்.
இதே வழக்கில் காஞ்சனா என்பவரும் பல்டி அடித்து சாட்சியை மாற்றிக் கூறினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை இந்த மாதம் 27ம் தேதிக்கு தள்ளி வைத்து மூன்றாவதுதனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் உத்தரவிட்டார்.
டான்சி வழக்கில் சார்பதிவாளர் முதலில் கொடுத்த சாட்சியத்தை மாற்றிக் கூறியுள்ளார்.இதனால், அந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இலவச செருப்பு ஊழல் வழக்கிலும் சாட்சிகள் பல்டி அடித்துள்ளதுமுக்கியத்துவம் பெறுகிறது.