யூ.டி.ஐ. தலைவரைப் பரிந்துரை செய்ததே ஜெ.தான் என்கிறார் பெர்ணான்டஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
யூ.டி.ஐ. தலைவராக இருந்து, கைது செய்யப்பட்ட பி.எஸ். சுப்ரமணியத்தை அதன் தலைவராக நியமிக்க பரிந்துரைசெய்ததே ஜெயலலிதாதான் என்று தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்கூறினார்.
யூ.டி.ஐ. ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுப்ரமணியத்தை அதன் தலைவராக நியமிக்க பரிந்துரைசெய்ததே ஜெயலலிதாதான்.
1998ம் ஆண்டு இதற்காக அவர் எங்களிடம் பரிந்துரை செய்தார். அந்த சிபாரிசுக் கடிதத்தை ஜெயலலிதா எனக்குஅனுப்பினார். எனவே இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்றார்.
தனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா கூறுகிறாரே என்று நிருபர்கள்கேட்டதற்கு, "ஏன் என்று அவரிடமே கேளுங்கள்" என்று சொல்லிவிட்டார் பெர்ணான்டஸ்.












Click it and Unblock the Notifications