ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் திமுக தொண்டர்கள்
சென்னை:
தமிழகம் முழுவதிலுமிருந்து வந்து, சென்னை பேரணியில் கலந்துகொண்ட திமுக தொண்டர்கள் மீண்டும்தங்களுடைய ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை-சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏவான வை. பெருமாள் உள்ளிட்ட 6 திமுக தொண்டர்கள் இந்தவன்முறைக்குப் பலியாயினர். மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்தப் பேரணிக்கு மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் சென்னையில்முகாமிட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வேன், பஸ், லாரி என்று பல்வேறு வாகனங்களில் சென்னைவந்திருந்தனர்.
பேரணியில் தொண்டர்கள் அனைவரும் நடந்தே வரவேண்டும் என்ற திமுக தலைமையின்வேண்டுகோளுக்கிணங்க, தாங்கள் வந்திருந்த அனைத்து வாகனங்களையும் ஆங்காங்கே நிறுத்தி விட்டுத்தான்திமுகவினர் பேரணியில் கலந்து கொண்டனர்.
ஆனால், வன்முறைச் சம்பவத்தில் திமுகவினர் வந்திருந்த பெரும்பாலான வாகனங்கள் சேதமடைந்திருந்தன.இதனால், சேதமடைந்த அந்த வாகனங்கள் அனைத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
அந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது போலீசாரின் காவலில் உள்ளதால், அந்த வாகனங்களில் சென்னைக்குவந்தவர்கள் திரும்ப ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
போலீசாரின் பிடியில் உள்ள தங்களுடைய வாகனங்கள் எப்போது வரும், தாங்கள் எப்போது திரும்புவோம் என்றுஒன்றும் புரியாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்துள்ள திமுக தொண்டர்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications