For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்திரிக்கையாளர்களும் படுகாயம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் நடந்த திமுக பேரணி கலவரத்தில் திமுக தொண்டர்களோடு சேர்த்து பத்திரிக்கையாளர்களையும் புகைப்படக்கலைஞர்களையும் போலீசார் விரட்டி விரட்டி அடித்து நொறுக்கினர்.

வன்முறையையும், போலீஸ் தடியடியையும் படம் எடுத்த பத்திரிக்கை புகைப்படக்காரர்களை போலீசார் தடிகளால் தாக்கினர்.இதில் பல பத்திரிக்கையாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

படம் பிடித்த புகைப்பட கலைஞர்களின் கேமராக்களையும் போலீசார் பறித்தனர். பின்னர் பிலிம் ரோலை எடுத்துவிட்டு வெறும்கேமராக்களைத் தான் திருப்பிக் கொடுத்தனர்.

போலீஸ் தடியடி மட்டுமின்றி திமுகவினரும் ரெளடிக் கும்பல்களும் கண்ணை மூடிக் கொண்டு எல்லா பக்கமும் தாக்குதல்நடத்தினர். இதில் ஹிந்து நாளிதழின் புகைப்படக் கலைஞர் மூர்த்தியின் மண்டை உடைந்தது.

தனியார் டிவி கேமராமேனின் கேமராவும் உடைக்கப்பட்டது.

டி.ஜி.பி. அலுவலகத்துக்குள் போன கேமராமேன்களையும் நிருபர்களையும் போலீசார் சிறை வைத்தனர். நெடு நேரத்துக்குப் பின்புதான் விடுவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X