யூ.டி.ஐ. ஊழலில் ஜெ.யா? - அமைச்சர் தம்பிதுரை ஆவேசம்
சென்னை:
யூ.டி.ஐ. ஊழலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சம்பந்தப்படுத்தி பா.ஜ.கவின் துணைத் தலைவர் அறிக்கைவெளியிட்டிருப்பது துரதிருஷ்டவசமானது என்று தமிழக கல்வி அமைச்சர் தம்பிதுரை கூறியுள்ளார்.
யூ.டி.ஐ. ஊழலில் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ள பா.ஜ.க., கொஞ்சம் கூட பொருந்தாத வகையில்ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டியிருப்பது வேண்டாத வேலை.
யூ.டி.ஐ. ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அதன் முன்னாள் தலைவர் சுப்பிரமணியத்திற்கும், அதிமுகதலைமைக்கும் இதில் ஏதோ தொடர்பு இருப்பது போல பா.ஜ.கவின் துணைத் தலைவர் அகர்வால் புகார்கூறியுள்ளார்.
இவருடைய இந்த அறிக்கை, கெட்ட எண்ணத்துடன், வேண்டுமென்றே, விஷமத்தனமான நோக்கத்துடன்வெளியிடப்பட்டுள்ள அறிக்கையாகும். சர்க்கரை ஊழல், தெஹல்கா டாட் காம் ஆயுத பேர ஊழல், தற்போதுயூ.டி.ஐ. ஊழல் என்று அடுத்தடுத்து ஊழல்களில் சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கும் பா.ஜ.கவின்நேர்மை கேள்விக்குரியதாகி, கறைபடிந்து, பரிதாபகரமாகியுள்ளது.
தன்னுடைய நிலையை ஒழுங்குபடுத்திக் கொள்ள இயலாத பா.ஜ.க., பிறர் மீது பழிபோட வேண்டும் என்றஆர்வத்தில், அதிமுகவை பலிகடா ஆக்கப் பார்க்கிறது.
ஜெயலலிதா மீதான இந்தக் குற்றச்சாட்டில் எள்ளளவு கூட உண்மை இல்லை என்பதை நாடே அறியும்.இந்நிலையில், அவருடைய பெயரையும் இந்த யூ.டி.ஐ. ஊழலில் தொடர்பு படுத்தியிருப்பது மிகவும்துரதிருஷ்டவசமானது.
பா.ஜ.கவால் ஜோடிக்கப்பட்ட இந்தக் கட்டுக்கதையை, ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்த மக்கள் துளியும் நம்பமாட்டார்கள்.
"மாறுபட்ட கட்சி" என்று கூறிக்கொண்டிருக்கும் பா.ஜ.க. தற்போது தேய்ந்து கொண்டிருக்கிறது. இதைத் தூக்கிநிறுத்துவதற்குத் தேவையான சக்தியை இந்த தலைவர்கள் செலவழித்தால் நன்றாக இருக்கும் என்றார் தம்பிதுரை.












Click it and Unblock the Notifications