பரபரப்பான சூழலில் சட்டசபை கூடுகிறது
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை சென்னையில் தொடங்குகிறது. பரபரப்பான சூழ்நிலையில் கூடும்சட்டசபைத் தொடர் அனல் பறப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி இம்முறை எதிர்க்கட்சியாகியுள்ளது.இதுதவிர,முக்கிய எதிர்க்கட்சியான திமுக மிகுந்த கொந்தளிப்புடன் உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி அதிரடியாக கைது செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து நடந்த திமுக பேரணியின்போது போலீஸார்கடுமையாக நடந்து கொண்டது, துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் இறந்தது ஆகியவை சட்டசபையை கலக்கும் என்று தெரிகிறது.
துணைக்கு பாமக இருப்பதால் சட்டசபையை செயலிழக்கச் செய்யும் வகையில் திமுக நடந்து கொள்ளும் என்று தெரிகிறது.
மொத்தத்தில் இந்த சட்டசபைக் கூட்டத் தொடர் விஜயகாந்த் பட பாணியில் அதிரடியாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.












Click it and Unblock the Notifications