For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரங்கராஜனை சந்தித்தார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் டாக்டர் ரங்கராஜனை இன்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் மாளிகையில்சந்தித்து பேசினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தி.மு.க சார்பில் நடந்த கண்டன பேரணியில் தி.மு.க.தொண்டர்கள் போலீசாரால்தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த முழு விவரங்களையும் அறிந்து கொள்வதற்காக. தமிழக ஆளுநராக தற்காலிக பொறுப்பு வகித்து வரும்ஆந்திர மாநிலத்தின் ஆளுநர் சென்னை வந்தார்,

அவரை திங்கள்கிழமை காலை தமிழக தலைமைச் செயலாளர் சங்கர் சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க.தொண்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் ஆளுநர் ரங்கராஜனை செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து பேசினார் ஜெயலலிதா.

இந்தச் சந்திப்பின்போது, தமிழக போலீஸ் டி.ஜி.பியான ஏ. ரவீந்திரநாத் மற்றும் சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் முத்துக்கருப்பன் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஆளுநர் ரங்கராஜன் இன்று காலையே மீண்டும் ஹைதராபாத் திரும்புவதாக இருந்தது. ஆனால், தற்போதுள்ளசூழ்நிலை காரணமாக அவர் ஹைதராபாத் செல்லும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X