இந்த ஆலையில் என்ன தயாரிக்கிறார்கள்?
சென்னையிலிருந்து 140 கி.மீ. தொலைவில் வேலூர் - சித்தூர் நெடுஞ்சாலையில் மலைகள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது இந்த தமிழ்நாடு தொழில்துறை வெடிமருந்து நிறுவனம்.
வெடிமருந்துகளால் எப்போதுமே ஆபத்து தான் என்பதால், மலைப்பாங்கான ஓதுக்குப்புறமான இடத்தில் தான்இந்த ஆலை அமைக்கப்பட்டது.
இது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (டிட்கோ) சார்பில் தொடங்கப்பட்ட இந்த ஆலை தமிழகஅரசுக்குச் சொந்தமானது.
வெடி பொருள்களைத் தயாரிக்க ஏதுவான வெப்பமண்டலப் பகுதி (ட்ராபிகல் கிளைமேட்) என்பதால் தான் இங்குஇந்த ஆலை நிறுவப்பட்டது.
இங்கு வெடிகுண்டுகள் தயாரிக்கப்ப பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் மற்றும் உதிரி பாகங்கள்தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் வெடிபொருட்கள் இந்தியா முழுவதும் பல்வேறு வகை வெடிகுண்டுகளில்பயன்படுத்தப்படுகின்றன.
மழையடிவாரத்தில் உள்ள தொழிற்சாலையில் நவீன ரக தொழில்நுட்பத்துடன் அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள்தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கக்கூடியவை. எனவே இங்குவேலை செய்யும் அனைத்துப் பணியாளர்களுக்கும் நவீன பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
தயாராகும் துப்பாக்கிக் குண்டுகள்:
இங்கு ஆண்டுக்கு 12,500 டன் எடையுள்ள நைட்ரோகிளிசரின் அடங்கிய துப்பாக்கித் தோட்டாக்கள்தயாரிக்கப்படுகின்றன.
மேலும் ஆண்டுக்கு சுமார் 4 கோடியே 50 லட்சம் அலுமினியம் மற்றும் தாமிர டெடோனேட்டர்களும், 1 கோடியே10 லட்கம் மீட்டர் நீளமுள்ள வெடிகுண்டு பியூஸ் வயர்களும்(மெல்லிய வயர்) தயாரிக்கப்படுகின்றன.
இது தவிர பல வெடிமருந்துப் பொருட்களும் இங்கு தயாராகின்றன.
இதுவரை நவீன பாதுகாப்பு வசதிகளுடன் நடத்தப்பட்டு வந்த இந்த தொழிற்சாலையில், இப்போது நடந்துள்ளவெடிவிபத்து பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.