பேரணி வன்முறை: சி.பி.ஐ. விசாரணைக்கு திமுக-நிருபர்கள் கோரிக்கை
சென்னை:
தி.மு.க. நடத்திய கண்டன பேரணியின் போது ஏற்பட்ட கலவரத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கம், நிருபர்கள் சங்கம்,பிரஸ் கிளப் ஆகிய 3 அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கு எதிர்பு தெரிவித்து பத்திரிக்கையாளர் சங்கம், நிருபர்கள் சங்கம், பிரஸ் கிளப் ஆகியவற்றை சேர்ந்தவர்கள்புதன்கிழமை அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 12ம் தேதி தி.மு.க. பேரணியில் நடந்த கலவரத்தின் போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வியாழக்கிழமை முதல் நடைபெற இருக்கும் சட்டசபை கூட்டம் மற்றும் பட்ஜெட் உரைகளின் போது செய்திசேகரிக்கச் செல்லும் நிருபர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும்.
போலீஸ் கமிஷனர்-நிருபர்கள் சந்திப்பின் போதும் கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும்.
தாக்குதலின்போது, புகைப்பட நிருபர்களிடமிருந்து போலீசார் பறித்துச் சென்ற பிலிம் ரோல்கள், காமிராக்கள்மற்றும் பல உபகரணங்களை போலீசார் திரும்ப தர வேண்டும்.
போலீசார் தாக்குதலின் போது, சேதமடைந்த வீடியோ காமிராக்களுக்கும், புகைப்பட காமிராக்களுக்கும் நஷ்ட ஈடுவழங்க வேண்டும்.
போலீசார் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின்அறிக்கை ஆளுநருக்கும், இந்திய பிரஸ் கவுன்சிலுக்கும், மாநில தலைமைச் செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்படும்.
இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிபிஐ விசாரணைக்கு திமுகவும் கோரிக்கை
இன்று (வியாழக்கிழமை) காலை நாடாளுமன்ற வாசலில் திமுக எம்.பியான விடுதலைவிரும்பி, நிருபர்களுக்குப்பேட்டியளிக்கும்போது, திமுக பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.