மேலும் குண்டுகள் வெடிக்கலாம்: மீட்புப் படையினர் அச்சம்

Subscribe to Oneindia Tamil

காட்பாடி:

வெடிவிபத்து நடந்த தொழிற்சாலையில், மேலும் சில குண்டுகள் வெடிக்கலாம் என்று மீட்புப் படையினர்அஞ்சுவதால், மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று (வியாழக்கிழமை) காலை காட்பாடியிலுள்ள வெடிகுண்டுகள் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும்வெடிவிபத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 பேர் பலத்ததீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

வெடிவிபத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாகவும், அங்கு சிதறிக் கிடக்கும் குண்டுகள்மீண்டும் வெடித்து விடும் என்ற அச்சத்தின் காரணமாகவும், மீட்புப் படையினர் உள்ளே செல்வதற்குத் தயங்கிக்கொண்டிருக்கின்றனர்.

இதனால், மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தொழிற்சாலைக்குள் சிக்கியுள்ளவர்களில் சிலர்உயிரோடு இருப்பதற்கும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஐ.எஸ்.ஓ. 9002 சான்றிதழ் பெற்றுள்ளதாக அதிகாரிகள்கூறினர்.

ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாமல் இருந்ததால்தான், இந்த வெடிவிபத்துஏற்பட்டுள்ளது என்று போலீசார் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+