யூ,டி.ஐ. ஊழல்: ஜெ. மீதான குற்றச்சாட்டை திடீரென மறுக்கிறது மத்திய அரசு
டெல்லி:
விதிமுறைகளின் அடிப்படையில் தான் யூ.டி.ஐ. தலைவராக சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவரைநியமிக்கக் கோரி யாரும் (ஜெயலலிதா) சிபாரிசு ஏதும் செய்யவில்லை என மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா நாடாளுமன்றத்தில் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமானஜார்ஜ்பெர்ணான்டஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்தார்.அப்போது நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில்,
யூ.டி.ஐ. ஊழலில் தொடர்புடைய அதன் முன்னாள் தலைவர் சுப்பிரமணியத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாதான்அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்தார். அவரை யூ.டி.ஐ. தலைவராக நியமிக்க வேண்டும் என்று என்னிடம் கடிதமேகொடுத்தார்.
அப்போது அவர் பா.ஜ.க. அரசை ஆதரித்து வந்தார். எனவே, அவரது பரிந்துரையை ஏற்று சுப்பிரமணியம்நியமிக்கப்பட்டார். இப்போது சுப்பிரமணியம் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார். எனவே ஜெயலலிதாவுக்கும் கூடயூ.டி.ஐ ஊழலில் தொடர்பு உள்ளது என்றார்.
இந்த கருத்தை ஜெயலலிதா மிகக் கடுமையாக மறுத்தார்,
இந் நிலையில், சுப்பிரமணியம் யூ.டி.ஐ. தலைவராக நியமனம் செய்யப்பட்டது பற்றி விளக்கமளிக்க வேண்டும்என்று பாராளுமன்றத்தில் காங்கிரசார் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினர்.
இது குறித்து விளக்கமளித்த நிதி அமைச்சர் சின்ஹா கூறியதாவது,
தற்போது சி.பி.ஐ விசாரணையில் உள்ள சுப்பிரமணியம், யூ.டி.ஐ. தலைவராக விதிமுறைகளின் அடிப்படையில்தான்நியமிக்கப்பட்டார். யூ.டி.ஐ. தலைவரை நியமனம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தபுத்தகத்தில் உள்ள அனைத்து வழிகாட்டுதலையும் மத்திய அரசு கடைபிடித்துள்ளது என்றார்.
அப்போது இடைமறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் கொறடாவான பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி,ஜெயலலிதாதான் யூ.டி.ஐ தலைவர் பதவிக்கு சுப்பிரமணியத்தை சிபாரிசு செய்தார் என்று ஜார்ஜ் பெர்ணான்டஸ்கூறியிருக்கிறார். அவர் ஏன் அவ்வாறு கூறவேண்டும் என்று கேட்டார்.
கூட்டணிக் கட்சிகளின் பரிந்துரையை ஏற்று யூ.டி.ஐ தலைவரை எப்படித் தேர்ந்தெடுக்கலாம் என்றார்.
மேலும் இது பற்றி பிரதமர் தகுந்த விளக்கம் அளிக்கும்வரை காங்கிரஸ் கட்சி போராடும் என்றும் அவர் கூறினார்.
ஆனால், முனிஷியின் கேள்விக்கு சின்ஹா ஏதும் விளக்கம் அளிக்கவில்லை.
சின்ஹாவின் இந்தப் பேச்சின் மூலம் ஜெயலலிதா மீது பெர்னாண்டஸால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுவலுவிழந்துள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications