சாவு எண்ணிக்கை 30 ஆனது
காட்பாடி:
காட்பாடி வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகிவிட்டது.
காட்பாடி-சித்தூர் சாலையில், காட்பாடியிலிருந்து 5 கி.மீ. தூரத்தில், பாறைகள் நிறைந்த மலைப் பகுதியில் இந்தவெடிமருந்துத் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இத்தொழிற்சாலையின் 302வது பிரிவில், டெட்டனேட்னர் வகை வெடிகுண்டு ஒன்று பலத்த சத்தத்துடன்வெடித்ததால்தான், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பல கி.மீ. தூரத்திற்கு இந்த வெடிச்சத்தம் கேட்டதாகவும் அப்பகுதிமக்கள் கூறுகின்றனர்.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு, ரூ.50,000 நஷ்ட ஈடும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.15,000 நஷ்டஈடும், காயமடைந்த மற்றவர்களுக்கு ரூ.6,000 நஷ்ட ஈடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விபத்து நடந்துள்ள அந்தத் தொழிற்சாலையில், மேலும் வெடிகுண்டுகள் வெடித்துவிடாத படி, பாதுகாப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்துநடந்த 302வது பிரிவின் மேற்பார்வையாளர், அப்போது வெளியே சென்றிருந்ததால், அவர் உயிர் தப்பி விட்டார்.
விபத்து நடந்த இடத்திற்கு, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டுரங்கனும், தொழில்துறை அமைச்சர்வைத்திலிங்கமும் விரைந்துள்ள நிலையில், உயர் போலீஸ் அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும்,வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் மோகன்தாஸ் விபத்து நடந்த இடத்தில் முகாமிட்டுள்ளார்.