தி.மு.க பேரணி வன்முறை: 3 மாதத்திற்குள் அறிக்கை தர கமிஷனுக்கு உத்தரவு
தி.மு.க பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு குறித்துவிசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி பக்தவச்சலம் கமிஷன் தனது விசாரணைஅறிக்கையை 3 மாதத்திற்குள் கொடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட பேரணியின்முடிவில் பெரும் வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர்இறந்தனர். பத்திரிக்கையாளர்களும் இந்த நிகழ்ச்சியின்போது கடுமையாகத்தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பக்தவச்சலம்தலைமையிலான விசாரணைக் கமிஷனை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.தற்போது 3 மாதத்திற்குள் தனது விசாரணை அறிக்கையை வழங்குமாறு கமிஷனுக்குதமிழக அரசு காலக் கெடு நிர்ணயித்துள்ளது.
கமிஷன் விசாரணையின்போது, பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தும்போதுமேற்கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகள், ஒழுங்குக் கட்டுப்பாடுகள் மற்றும்பத்திரிக்கையாளர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிக்கும்போதுகடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், எவ்வளவு தூரத்தில் அவர்கள் இருக்கவேண்டும் மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து கமிஷன்தனது அறிக்கையில் பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications