For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் விரைவில் 3-வது அணி- இளங்கோவன்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தமிழக மக்கள் அதிமுக மற்றும் திமுக அரசுகளுக்கு மாற்று அரசு ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.அதனால் 3 -வது அணி அமையும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என் று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறினார்.

மதுரையில் இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் கடந்த 3 மாத கால அதிமுக ஆட்சியில் என்ன நடந்துள்ளது?. அதிமுகவினர் திமுகவினரைபழிவாங்குவதில் தான் கவனம் செலுத்திவருகிறார்கள்.

இதில் திமுகவினரும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களும் வன்முறையில் இறங்கினார்கள். இவர்கள் சண்டையினால்போலீஸ் அதிகாரிகளும் அதிமுக, திமுக என 2 பிரிவாக செயல்பட்டு வருகிறார்கள்.

மேலும் இந்த 2 கட்சியினரும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி இவர்கள் சிறிதும்கவலைப்படுவதே இல்லை.

இன்னும் தமிழத்தின் பல பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறையை இந்த அரசு தீர்க்க முடியவில்லை. இதனால்தமிழகமே பாதிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற நிகழ்ச்சிகளை தமிழக மக்கள் பல வருடங்களாகப் பார்த்து வருகின்றனர்.

அதனால் மக்களுக்கு இப்போது இந்த 2 அணிகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் இந்த 2அணிகளுக்கு மாற்றாக ஒரு 3 -வது அணி ஆட்சி செய்யவேண்டும் என்றே விரும்புகின்றனர் என்றார்.

பேரணி வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி பக்தவச்சலம் கமிஷன், பத்திரிக்கையாளர்கள்தாக்கப்பட்டது குறித்து தீர விசாரித்து, அவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வழிமுறைகள் வகுக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் முக்கியமான பங்கு வகிக்கும் பத்திரிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X