இது எனக்கு புதிதல்ல: பரிதி
சென்னை:
சட்டசபையில் தி.மு.க உறுப்பினர் பரிதி இளம்வழுதி 2 நாள் அவையிலிருந்துவெளியேற்றபட்டதை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பரிதி இளம்வழுதி நிருபர்களிடம்கூறுகையில், நான் கூறும் கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்தும் நீக்குவது புதிதல்ல.முன்பும் இதே போல் நடந்துள்ளது.
அதே போல் என்னை சஸ்பெண்ட் செய்வதும் புதிதல்ல. பல முறை என்னைஅவையிலிருந்து வெளி.யற்றி இருக்கிறார்கள். சஸ்பெண்டும் செய்திருக்கிறார்கள்என்றார்.
திருமாவளவன் கருத்து:
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏவுமான திருமாவளவன்கூறுகையில், பரிதி இளம் வழுதியின் கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்கியதேஒரு தண்டனைதான்.
அவரை 2 நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதன் மூலம் அவருக்கு இரட்டிப்புதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்றார்.












Click it and Unblock the Notifications